×

தியாகதுருகம் அருகே சோகம் பைக்குகள் நேருக்குநேர் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

தியாகதுருகம், அக். 25: தியாகதுருகம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த விருகாவூர் -அசகளத்தூர் செல்லும் சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பிம்பளூர் பகுதியை சேர்ந்த மருதமுத்து மகன் அய்யம்பெருமாள் கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது எதிரே ஈய்யனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மனைவி கல்பனா(22) கள்ளக்குறிச்சியிலிருந்து பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பினார். இருவரும் எஸ்.ஒகையூர் அருகே பைக்குகளில் வந்தபோது சாலை ஓரமாக நிறுத்தப்பட்ட டிராக்டரை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதினர்.

இதில் பலத்த காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் டிராக்டரை இயக்கி வந்த ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து சென்றனர். தொடர்ந்து சடலங்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வரஞ்சரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தியாகதுருகம் அருகே சோகம் பைக்குகள் நேருக்குநேர் மோதி பெண் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Martyrdom ,Thiagodurugam ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்